பறவைகள் இறப்பைத் தவிர்க்க காற்றாலை இறகில் கருப்பு வர்ணப்பூச்சு சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
காற்றாலைகளின் இறக்கைகளில் பறவைகள் மோதுவதால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க, இறக்கைகளில் கருப்பு வர்ணப்பூச்சு உள்ளிட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.