விசாரணை கைதியாக சிறையில் தவிப்போர் விடுதலை எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
இந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் பெரும்பாலானோர் விசாரணை கைதிகள். குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே பல ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டிய நிலை, நீதித்துறை தாமதம் மற்றும் ஜாமீன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக மனித உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. விரைவான விசாரணை, நீதிபதிகள் நியமனம் மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.